INFORMATION
மகாளய பட்சத்தில் இத வீட்டில் மறக்காமல் செய்திடுங்க
மகாளய பட்சம்
முன்னோர்களின் ஆசியைப் பெறவும், அவர்களுக்கு முக்தி கிடைக்கவும் மகாளய பட்சத்தில் விளக்கேற்றுவது முக்கியம். விளக்கேற்றுவதால் வீட்டில் மகிழ்ச்சி, செல்வம், நல்லிணக்கம் நிலவும். வீட்டு தெய்வங்கள் வீட்டிற்கு வருவதற்கும், முன்னோர் பாவங்கள் நீங்குவதற்கும் உதவும்.
இதையும் படிக்கலாமே : சிவபுராணத்தின் முக்கிய கருத்துகள் https://astrologytamil.in/concepts-of-shiva-purana-in-tamil/
முன்னோர்களின் படத்திற்கு முன்பு நல்லெண்ணெய் விளக்கேற்ற வேண்டும். வாசலில் காவி கோலமிட்டு, வெளிப்புறமாக விளக்கு ஏற்ற வேண்டும். இது மோட்ச தீபத்திற்கு சமம். நான்கு திசைகளையும் நோக்கி விளக்கேற்ற வேண்டும். இது எமனுக்குரிய திசை என்பதால், எமன் பித்ருலோகத்தில் இருக்கும் நம்முடைய முன்னோர்களை காப்பார் என்பது ஐதீகம்.
