INFORMATION
திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம்
புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
அரசு விடுமுறை நாளான நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கிரிவலம் தொடங்கினர். தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்திருந்தனர். கோவிலில் சாமி தரிசனத்திற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவருக்கும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தது.
முருகன் நாமத்தின் சிறப்பு? https://astrologytamil.in/specialness-of-murugan-name/
