INFORMATION
துளசி செடி வழிபாட்டின் நன்மைகள்
இந்து மதத்தில் மிகவும் புனிதமாகக் கருதப்படும் துளசி செடி, லட்சுமி தேவியின் உருவமாகவும், விஷ்ணுவிற்கு மிகவும் விருப்பமானதாகவும் கருதப்படுகிறது.
துளசி செடி வழிபாட்டின் நன்மைகள்:
துளசியை தினமும் பூஜித்து வழிபடுவதால், லட்சுமி தேவியின் அருள் கிடைத்து செல்வம் பெருகும். வீட்டில் துளசி செடி வைப்பதால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். துளசி செடியை வீட்டின் வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் வைக்க வேண்டும். தினமும் காலையில் குளித்துவிட்டு சுத்தமான ஆடை அணிந்து வழிபட வேண்டும்.
இதையும் படிக்கலாமே : மகாளய பட்சத்தில் இத வீட்டில் மறக்காமல் செய்திடுங்க https://astrologytamil.in/do-not-forget-this-at-home-in-case-of-mahalaya/
ஒவ்வொரு நாளும் துளசிக்கு நீர் வழங்க வேண்டும். துளசி செடியை மூன்று முறை சுற்றி வர வேண்டும். பிரதட்சணம் செய்யும் போது “மஹாபிரசாத் ஜனனி, சர்வ சௌபாக்யவர்த்தினி ஆதி வ்யாதி ஹர நித்யம், துளசி த்வம் நமோஸ்துதே” என்ற மந்திரத்தை உச்சரிக்கலாம்.
துளசி செடியை சுற்றி வரும் போது மனம் அமைதியாகவும், தூய்மையாகவும் இருக்க வேண்டும். துளசி செடியை சரியான முறையில் வழிபடுவதால் நேர்மறை ஆற்றல், செல்வம் மற்றும் ஆன்மீக வளர்ச்சி கிடைக்கும்.
