latest news
அமாவாசையில் இவ்வளோ பலன்களா…
அமாவாசையில் இவ்வளோ பலன்களா…!
இந்துக்களை பொறுத்தவரை அமாவாசை நாளை கனத்த நாளாக கொள்வர் அன்று சுப நிகழ்வுகள் தொடங்கவோ, வாங்கவோ மாட்டார்கள். ஆனால் அமாவாசைக்கு என தனித்தே சில நல்ல பலன்கள் கொண்ட நாளாகும். அமாவாசையானது பித்ருக்களுக்கு மிகவும் திருப்தியை அளிக்ககூடிய நாளாகும். அமாவாசை நாளில் பித்ருக்களை நினைத்து அன்னம் தானம் செய்தால் மனதில் திருப்தி ஏறப்பட்டு நல்ல செயல்களுக்கு காரனமாக அமையும்.
திருவாதிரை, புனர்பூசம், பூசம் நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் தர்ப்பணம் நல்ல பலனை தரும். அமாவாசைக்கு தர்ப்பணம், அன்னம் தானம் செய்வதனால் பித்ருக்கள் திருப்தி அடைந்து ஆயிரம் யுகங்கள் சுகமாக தூங்குவார்கள் என விஷ்ணுபுராணத்தில் ஒரு கருத்து உண்டு.
