Connect with us

சிதம்பர ரகசியம்?

What is the secret of Chidambara Rahasyam?

latest news

சிதம்பர ரகசியம்?

சிதம்பர ரகசியம் (Chidambara secret)

சிதம்பரம் கோயிலின் அமைப்பே ஒரு ரகசியம் என்று சிலர் சொல்கிறார்கள் , மனித உடலின் அமைப்பை ஒத்திருக்கும் விதமாக இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது என்றும், அதன் கணித அமைப்பும், கலைத் திறமையும் அதிசயமூட்டுவதாகவும் கூறுகிறார்கள் , இக் கோவிலின் கருவறை நடராஜர் சிலை இல்லாமல் காற்றுவெளி மட்டுமே இருக்கும் , இறைவன் இங்கு ஆகாய தத்துவமாக, அதாவது உருவமற்றவனாக இருப்பதைக் குறிக்கிறது , தரிசித்து வழிபட்டால், மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சிதம்பரம் கோயில் ஆகாய தலம் என்றும் அழைக்கப்படுகிறது , பஞ்சபூத தலங்கள் எனப்படும் ஐந்து சிவன் கோயில்களில் இதுவும் ஒன்று , இந்த ஐந்து கோயில்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளது இன்னொரு ரகசியம் என்று கருதப்படுகிறது , கோவிலின் மிகப்பெரிய மண்டபமான சிற்றம்பலத்தில் ஒரு தனிச் சன்னதியில் தங்கத்தால் ஆன வில்வ இலை (Bilva Leaves) மாலை தொங்குவதாகக் கூறப்படுகிறது , நடராஜர் ஆனந்த நடன தத்துவத்தை வெளிப்படுத்துகிறது.

வைகாசி விசாக விரதத்தின் வழிமுறைகள்    https://astrologytamil.in/2024/06/11/instructions-for-vaikasi-visakha-fast/

இவை தவிர, கோயிலின் காலண்டர் முறை, பஞ்சபூத தத்துவத்துடன் , இதன் இணைப்பு போன்ற பல விஷயங்கள் ரகசியங்கள் என்றே கருதப்படுகின்றன , சிதம்பரம் என்றால் “சித்” (அறிவு) + “அம்பரம்” (வெட்டவெளி) என்று பொருள்படும். இங்குள்ள நடராஜர் சிலை வெறும் வெட்டவெளியில் ஆனந்த நடனம் ஆடுவது போல் இருக்கும். இறைவன் எங்கும் இருக்கிறான் என்பதையும், அவன் உருவமற்றவன் என்பதையும் இது குறிக்கும்.

Continue Reading
You may also like...

More in latest news

To Top