Connect with us

திருச்செந்தூர் பன்னீர் விபூதியின் சிறப்பம்சம்

திருச்செந்தூர் பன்னீர் விபூதியின் சிறப்பம்சம்

Astrology

திருச்செந்தூர் பன்னீர் விபூதியின் சிறப்பம்சம்

திருச்செந்தூர் பன்னீர் விபூதியின் சிறப்பம்சம்

திருச்செந்தூர் பன்னீர் விபூதி ஆன்மீக ரீதியாகவும், உடல் ஆரோக்கியம் ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரசாதமாகக் கருதப்படுகிறது.இந்த விபூதி பன்னீர் மரத்தின் இலைகளில் வைத்துத் தயாரிக்கப்படுகிறது. வேறு எந்தக் கோவிலிலும் இந்த முறை பின்பற்றப்படுவதில்லை என்பது இதன் தனிச்சிறப்பு.

இந்த விபூதிக்கு தீராத நோய்களைக் கூட குணப்படுத்தும் சக்தி இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். குறிப்பாக வலிப்பு, குஷ்டம் போன்ற கொடிய நோய்களையும், பேய் பிசாசு போன்ற தீய சக்திகளால் ஏற்படும் துன்பங்களையும் நீக்கும் வல்லமை உண்டு என பக்தர்கள் நம்புகின்றனர் பன்னீர் இலையை நேராக வைத்துப் பார்த்தால் அது முருகப்பெருமானின் வேல் போன்று காட்சியளிக்கிறது. இது முருகனின் அருளைப் பெற்றுத் தரும் ஒரு அடையாளமாகக் கருதப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:

திருச்செந்தூர் பன்னீர் விபூதியின் சிறப்பம்சம்

https://astrologytamil.in/special-feature-of-tiruchendur-panneer-vibhuti/

பன்னீர் இலையில் உள்ள பன்னிரண்டு நரம்புகள் முருகப்பெருமானின் பன்னிரு திருக்கரங்களைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால் இந்த விபூதி மேலும் சிறப்பு பெறுகிறது. திருநீற்றை பன்னீர் இலையில் பத்திரமாக வைத்துக் கொள்வது செல்வத்தைச் சேமிப்பதற்கு ஒப்பானது என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
பன்னீர் இலையில் உள்ள பூவில் சாந்த குணசக்தி நிறைவாக இருப்பதாக சித்த மருத்துவம் கூறுகிறது.

இந்த இலை விபூதியைப் பூசுவதால் உடலுக்கு சில நன்மைகள் கிடைக்கும், ஆதிசங்கரர் இந்த பன்னீர் இலை விபூதியை உட்கொண்டு தனது காசநோயை குணப்படுத்திக் கொண்டதாக வரலாறு கூறுகிறது. இதன் பின்னரே அவர் திருச்செந்தூர் முருகனைப் போற்றி சுப்பிரமணிய புஜங்கம் பாடியதாகவும் சொல்லப்படுகிறது.

தினமும் காலை விஸ்வரூப தரிசனத்தின்போது சுவாமி பாதத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட பிறகே பக்தர்களுக்கு இந்த விபூதி பிரசாதமாக வழங்கப்படுகிறது.
திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் தவறாமல் இந்த விபூதியைப் பெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

More in Astrology

To Top