Mustard remedy for eye strain
கண் திருஷ்டி என்பது ஒரு நம்பிக்கை சார்ந்த பிரச்சனை.ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் எந்த ஒரு நல்ல செயல் நடந்தாலும் தீய செயல் நடந்தாலும் அதனால் கண் திருஷ்டி என்பது ஏற்படும்.இந்த கண் திருஷ்டி மிகவும் மோசமான ஒன்று என்பதால் தான் அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் வாரத்திற்கு ஒருமுறையாவது வீட்டில் இருப்பவர்கள் அனைவரையும் அமர வைத்து சுற்றி போடும் வழக்கம் வைத்திருந்தார்கள். இன்றைய காலத்தில் அவை அனைத்தையும் நாம் மறந்து விட்டோம். இதற்கு பலவிதமான பரிகாரங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று வெண்கடுகு பரிகாரம்.
தொழில் செய்யும் இடத்தில் கண் திருஷ்டி ஏற்பட்டு திடீரென்று தொழில் சரிவடைந்து விட்டது என்பவர்களும், தொழிலில் பிரச்சனைக்கு மேல் பிரச்சினைகள், ஒன்றும் இல்லாத பிரச்சனைகள் ஆக வருகிறது என்பவர்களும், அவர்கள் தொழில் செய்யும் இடத்தில் இரண்டு சிறிய தட்டை வைத்து அதில் சிறிதளவு வெண்கடுகை போட்டு அதற்கு மேல் அகல் விளக்கை வைத்து கடுகு எண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் தொழில் செய்யும் இடத்திற்கு வரும் அனைவரும் பார்க்கும்படி இருக்க வேண்டும். காலையில் மாலையிலும் தினமும் ஏற்றலாம். இயலாதவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாளாவது ஏற்றுவதன் மூலம் அவர்களின் தொழிலில் இருக்கக்கூடிய கண் திருஷ்டிகள் அனைத்தும் நீங்கும்.
பரிகார முறை:
ஒரு கைப்பிடி வெண்கடுகை எடுத்துக்கொள்ளுங்கள்.
இதை உங்கள் தலைக்குச் சுற்றி விட்டு, பின்னர் உங்கள் வீட்டின் நான்கு மூலைகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக தூவ வேண்டும்.
மறுநாள் காலையில் எழுந்ததும், பல் தேய்த்து முகம் கழுவி விட்டு, அந்த வெண்கடுகை ஒரு தாம்பாளத்தில் சேர்த்து, அதில் ஒரு கற்பூரம் போட்டு எரிக்க வேண்டும்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…
இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…
இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…