INFORMATION
திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் போது கொடி மரம் சேதம்
திருப்பதி பிரம்மோற்சவம் அக்டோபர் 4 முதல் 12 வரை நடைபெற உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலின் தங்க கொடி மரத்தில் வளையம் உடைந்து விழுந்துள்ளது. கோவிலை சுத்தம் செய்யும் போது ஏற்பட்ட சேதம் எனக் கூறப்படுகிறது. இதனால் பிரம்மோற்சவ கொடியேற்றம் தாமதமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேவஸ்தான ஊழியர்கள் சேதத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருக்கும் நிலையில் இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதையும் படிக்கலாமே: நவராத்திரி காலத்தில் கடைபிடிக்க வேண்டியவை https://astrologytamil.in/things-to-observe-during-navratri/
திருப்பதி பிரம்மோற்சவத்தின் தொடக்கத்தில் ஏற்பட்ட இந்த சம்பவம், பக்தர்களின் மனதில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
