Connect with us

திருமலையில் கார்த்திகை நீராட்டு திருமஞ்சனம்

Karthikai Neeratu Thirumanjanam in Tirumala

INFORMATION

திருமலையில் கார்த்திகை நீராட்டு திருமஞ்சனம்

புனித கார்த்திகை மாதத்தில் நடைபெறும் கார்த்திகை வனப் போஜன மகோற்சவத்தின் ஒரு பகுதியாக, இன்று ஞாயிற்றுக்கிழமை திருமலை வைபவோற்சவ மண்டபத்தில், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மலையப்ப சுவாமிக்கு நீராட்டு திருமஞ்சனம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.

இதில் பகுதியாக, காலை ஸ்ரீ மலையப்ப சுவாமி மற்றும் உபயநாச்சியார்கள் வைபவோற்சவ மண்டபத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டனர்.

பின்னர், சுவாமி மற்றும் அம்மவார்களின் உற்சவங்களுக்கு பால், தயிர், தேன், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பான அபிஷேகம் செய்யப்பட்டது.

இதையும் படிக்கலாமே: 
கார்த்திகை மாதத்தின் முக்கியத்துவம் 
https://astrologytamil.in/significance-of-the-month-of-karthika/

நீராட்டிற்கு பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் டிடிடி இஈஓ திரு. ஜெ. ஷ்யாமலராவு, கோயில் துணை இஈஓ திரு. லோகநாதன், விஜிஜிஓ திரு. சுரேந்திரா, பேஷ்கார் திரு. ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

டிடிடி முதன்மை பொதுத் தொடர்பு அதிகாரியால் வெளியிடப்பட்டது.

More in INFORMATION

To Top