நாளை திறக்கப்படுகிறது சபரிமலை ஐயப்பன் கோவில்

சபரிமலை ஐயப்பன் கோவிலின் சன்னிதான நடை நாளை திறக்கப்படுகிறது. பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் இரண்டாம் தேதி கொடியேற்றம் நடைபெற உள்ளது. தொடர்ந்து சித்திரை விஷு பண்டிகையும் வருவதால் கோவில் நடை தொடர்ந்து 18 நாட்கள் திறந்திருக்கும் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி ஆராட்டு திருவிழா மற்றும் சித்திரை விஷு பண்டிகை ஆகியவற்றை முன்னிட்டு கோவில் நடை திறக்கப்படுகிறது. நாளை தந்திரி தண்டரர் ராஜீவரர் முன்னிலையில் மேல் சாந்தியான அருண்குமார் நம்பூதிரி நடையைத் திறந்து வைக்கிறார். அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், நெய்யாபிஷேகம், உஷ பூஜை ஆகிய பூஜைகள் நடைபெறும்.

இதையும் படிக்கலாமே:
தெய்வீக மற்றும் அசுர மனிதர்களின் பண்புகள் பற்றி கீதை
https://astrologytamil.in/gita-about-the-characteristics-of-divine-and-demonic-beings/

ஏப்ரல் 2ஆம் தேதி பங்குனி ஆராட்டு விழாவுக்கு கொடியேற்றம் நடைபெறும். கொடியேற்றத்திற்கு பின் இரவில் ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படுகிறது. தொடர்ந்து சில நாட்களில் சித்திரை விசு பண்டிகையும் வருவதால் கோவில் நடை தொடர்ந்து 18 நாட்கள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சித்திரை விஷு பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருவார்கள் என்பதால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பக்தர்கள் வசதிக்காக அனைத்து ஏற்பாடுகளையும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு செய்து வருகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை மட்டுமல்லாது மாசி மாத பூஜை, பங்குனி ஆராட்டு விழா, சித்திரை விஷு உள்ளிட்ட முக்கிய நாட்களிலும் நடை திறக்கப்படுவது வழக்கம்.

admin

Recent Posts

வாழ்வின் சூத்திரம் “தீதும் நன்றும் பிறர்தர வாரா”

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…

2 months ago

காலத்தின் கண்கள் – இந்திய ஜோதிட வரலாறு

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…

2 months ago

காவிரி அன்னைக்குச் சீர்வரிசை

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…

5 months ago

சுக்கிரனின் பார்வையால் யோகம் அடிக்கும் 3 ராசிகள்

இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…

5 months ago

நிலம், வீடு வாங்கும் சிக்கல் நீங்க எளிய பரிகாரம்

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…

5 months ago

ஒரு மண்டலம் விரத ரகசியம் சித்தர்களின் உறுதியான வாக்கு

இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…

5 months ago