INFORMATION
ஸ்ரீனிவாச மங்காபுரம் கார்த்திகை வனபோஜனம்
ஸ்ரீநிவாசமங்காபுரம் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் நவம்பர் 27 அன்று கார்த்திகை வனபோஜன நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த காரணத்தினால், நித்திய கல்யாணோற்சவம் ஆர்ஜித சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
பரிசுத்தமான கார்த்திகை மாதத்தில், திங்கட்கிழமை அன்று இங்கு வனபோஜன நிகழ்ச்சி நடத்துவது வழக்கமாக உள்ளது.
இதையும் படிக்கலாமே: திருமண யோகம் பார்ப்பது எப்படி https://astrologytamil.in/how-to-see-marriage-horoscope/
இதன் ஒரு பகுதியாக, காலை 7 மணி முதல் 9 மணி வரை, சுவாமி மற்றும் அம்மவாரின் உற்சவ மூர்த்திகளை கோயிலிலிருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று, காலை 9 மணிக்கு ஸ்ரீவரி மேட்டு அருகே உள்ள பார்வேட் மண்டபத்தில் எழுந்தருளச் செய்வார்கள். அங்கு காலை 10 மணி முதல் 11 மணி வரை, ஸ்நான திருமஞ்சனம் விழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த சந்தர்பத்தில், பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள் போன்ற வாசனை திரவியங்களால் விசேஷமாக அபிஷேகம் செய்யப்படும். அதன் பிறகு, அலங்காரம், வனபோஜனம், கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறும். அங்கிருந்து மாலை 5 மணிக்கு மீண்டும் கோயிலுக்கு வந்து சேர்வார்கள்.
