Connect with us

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா

Tirunelveli Nellayapar Temple Aippasi Thirukalyana Festival

INFORMATION

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா

திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் இன்று காலை ஐப்பசி திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. காந்திமதி அம்பாள் தங்க சப்பரத்தில் எழுந்தருளி கொடிமரத்தை வலம் வந்து, பின்னர் கொடிமரம் அலங்கரிக்கப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.

இந்த விழா 15 நாட்கள் நடைபெறும். தினமும் காந்திமதி அம்பாள் வீதி உலா வருவார். விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் அக்டோபர் 29 அன்று நடைபெறும். இதனைத் தொடர்ந்து பட்டிண பிரவேசம் மற்றும் ஊஞ்சல் திருவிழா நடைபெறும்.

இதையும் படிக்கலாமே:
வாழ்வில் சுபிட்சம் தரும் சங்கடஹர சதுர்த்தி 
https://astrologytamil.in/sangadahara-chaturthi-brings-happiness-in-life/
  • இன்று காலை 5 மணிக்கு கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
  • அடுத்த 15 நாட்கள் காந்திமதி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவார்.
  • அக்டோபர் 28 அன்று சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுக்கு காட்சி கொடுப்பார்.
  •  அக்டோபர் 29 அதிகாலை 5 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறும்.
  •  திருக்கல்யாணத்தைத் தொடர்ந்து மூன்று நாட்கள் ஊஞ்சல் திருவிழா நடைபெறும்.

இத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

More in INFORMATION

To Top