INFORMATION
ஏழுமலையானுக்கு தமிழகத்தில் ஆண்டுதோறும் அளிக்கப்படும் இரண்டு முக்கிய காணிக்கை எது என்று தெரியுமா
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தமிழக பக்தர்கள் சார்பில் வெண்பட்டு திருக்குடைகள் காணிக்கையாக அளிக்கும் பாரம்பரிய நிகழ்வு இந்த ஆண்டும் அக்டோபர் 2-ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது.
சென்னை சென்னகேசவ பெருமாள் கோவிலில் இருந்து திருக்குடை ஊர்வலம் புறப்பட்டு, பல்வேறு பகுதிகளைக் கடந்து அக்டோபர் 7-ஆம் தேதி திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்படும். இந்த நிகழ்வு 250 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்கலாமே : திருச்செந்தூர் முருகன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் https://astrologytamil.in/maha-kumbabhishekam-at-tiruchendur-murugan-temple/
தமிழக பக்தர்கள் சார்பில் 11 அழகிய வெண்பட்டு திருக்குடைகள் காணிக்கையாக அளிக்கப்படுகின்றன.
திருமலை திருப்பதி ஏழுமலையானுக்கு தமிழகத்தில் இருந்து ஆண்டுதோறும் அளிக்கப்படும் இரண்டு முக்கிய காணிக்கைகளில் இதுவும் ஒன்று. மற்றொன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலை.
